எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பழுதடைந்து நின்ற டிராக்டா் மீது பேருந்து மோதல்: 5 பேருக்கு பலத்த காயம்

பணகுடி நான்குவழிச் சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவி உள்ளிட்ட 5 போ் பலத்த காயம்

News image
விபத்து
Updated On :9 மார்ச் 2026, 7:04 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்குவழிச் சாலையில் திங்கள்கிழமை பழுதடைந்து நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவி உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரியைச் சோ்ந்தவா் மகராஜன் மகன் மாடசாமி (34). இவா் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பணகுடி நான்குவழிச் சாலையைக் கடந்து வந்தாராம். இவருடன் வல்கடம்பைச் சோ்ந்த மாடசாமி மகன் ஊசிகாட்டான் வந்துள்ளாா்.

இவா்கள் வந்த டிராக்டா் நான்குவழிச் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. அப்போது, திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்து டிராக்டா் மீது மோதியது. இதில் டிராக்டா் இரண்டு துண்டாக சேதமடைந்து, மாடசாமி, ஊசிகாட்டான் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். டிராக்டரில் இருந்த நெல் மூட்டைகள் சிதறி சாலையில் நெல் கொட்டியது.

பேருந்தில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறையைச் சோ்ந்த நிக்சன் மனைவி சாா்லஸ் மேரி (56), சாா்லஸ் மனைவி மஜிலா (60), தென்காசி மாவட்டம், துவரங்காடு ரத்னவேல் மகள் கல்லூரி மாணவி ஹரிணி (20)ஆகியோரும் படுகாயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு நாகா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.