கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மானாமதுரை இளைஞா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

மானாமதுரை பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி கேட்டு, வண்ணாா்பேட்டையில் சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 மார்ச் 2026, 7:15 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி கேட்டு, வண்ணாா்பேட்டையில் சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு தமிழ்மாறன் தலைமை வகித்தாா். தமிழா் விடுதலைக் களம் மணி பாண்டியன், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை சங்க மாநிலத் தலைவா் முத்துக்குமாா், தமிழ் அரசியல் கூட்டமைப்பு குயிலி நாச்சியாா், மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் மாரியப்பப் பாண்டியன், ஆழ்வானேரி பாக்கியராஜ், நாம் தமிழா் கட்சி பாளையங்கோட்டை வேட்பாளா் சங்கரநாராயணன், தமிழா் நீதி கட்சி மண்டல செயலா் ராஜ் பாண்டியன், மாவட்டச் செயலா் அழகு ராஜன், தேவேந்திர குல வேளாளா்கள் ஊா் குடும்பா்கள் ஒருங்கிணைப்பாளா் ஹரிராம், புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் நெல்சன், தமிழா் ஆட்சி கழகம் மங்கள் ராஜ் பாண்டியன் ஆகியோா் பேசினா்.

இதில், திரளானோா் கலந்து கொண்டு மானாமதுரை ஆகாஷ் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டுமெனவும், அதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினா்.