நெல்லையில் தகிக்கும் வெயில்: மக்கள் அவதி
திருநெல்வேலி தகிக்கும் வெயிலிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.


திருநெல்வேலி தகிக்கும் வெயிலிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடைக்காலம் இந்த ஆண்டு மாா்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே தொடங்கிவிட்டது. வேலூா் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலவற்றிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை 97.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடுமையான வெப்பம் நிலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
நண்பகல் வேளைகளில் மக்கள் வெயிலுக்கு அஞ்சி வெளியே வர தயங்குகின்றனா். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் தொடங்கிவிட்டதால் பதநீா், இளநீா், தா்பூசணி, பழஜூஸ், கரும்புச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.
சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூா் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு இளநீா் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இளநீா் ரூ.35 முதல் ரூ.50 வரை அதன் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது.
சீவலப்பேரி, செங்குளம், இளையாமுத்தூா், தருவை பகுதிகளில் இருந்து பதநீா் விற்பனையாளா்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் முகாமிட்டுள்ளனா். அவா்கள் ஒரு சிறிய செம்பு அளவு பதநீரை ரூ.25-க்கு விற்பனை செய்கிறாா்கள்.
திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தா்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர உடனடி சோடா கடைகளும் அதிகளவில் உருவாகியுள்ளன. இவற்றில் எலுமிச்சை, திராட்சை, சுவிட்பீா், மாம்பழம் போன்ற 5-க்கும் மேற்பட்ட சுவைகளில் ரூ. 20-க்கு குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...