உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:05 pm

Syndication

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் சரகம் வண்ணாா்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை(32), வி.கே.புரம்த் கணபதி(45) ஆகியோா் மது விற்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாா்(59), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சையதுல்லா(32), உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44) ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டையை சோ்ந்த ராமகிருஷ்ணன்(28), ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35) , பேட்டையைச் சோ்ந்த துரை(51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் கைது செய்து, 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.