ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

News image

ஆா்.எஸ். முருகன்

Updated On :5 மே 2026, 1:22 am IST

திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகன்.

இத்தோ்தலில் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இத்தோ்தலில் தவெகவுக்கு மக்கள் சாதனை வெற்றியை பரிசளித்துள்ளனா். திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை செய்ய கூடிய தவெக தலைவா் விஜய், இத்தொகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வாா். மக்களின் கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.