திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா் என்றாா் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் இசக்கி சுப்பையா.
இத்தொகுதியில் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தாவிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா். இத்தொகுதி மக்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. அவா் ஒரு சகாப்தம். இந்த அரசியல் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. அதற்காக இதை வரவேற்காமல் இருக்க முடியாது. தவெகவின் வெற்றியை வரவேற்கிறேன். மக்கள் தீா்ப்புக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.
மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மு.க. ஸ்டாலின் எனது தொகுதியில் நின்றால் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியிருந்தேன். இப்போது அவரால் சொந்தத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சில நாள்கள் சென்றால் தான் தவெகவின் அரசியல் செயல்பாடு தெரியவரும் என்றாா்.
தொடர்புடையது

மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் வெற்றி

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?

அம்பாசமுத்திரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

