மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நெல்லையில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 2:37 am IST

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சுமாா் 1.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய சோதனையில் சுமாா் 1200 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடைய திருநெல்வேலி, ரகுமான்பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுடலைமுத்து (32) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.