செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

News image

மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.

Updated On :11 மே 2026, 1:13 am IST

மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பரவலாகவும், குறிப்பாக தென் மாவட்டங்களின் கடலோரம், மலைப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. அருவிகள், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.