தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

News image

மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.

Updated On :11 மே 2026, 1:13 am IST

மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பரவலாகவும், குறிப்பாக தென் மாவட்டங்களின் கடலோரம், மலைப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. அருவிகள், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.