மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பரவலாகவும், குறிப்பாக தென் மாவட்டங்களின் கடலோரம், மலைப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. அருவிகள், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

12 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

11 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

தொடா் மழை: மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



