பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்ட விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு போலீஸாா் 2 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை கைது செய்தனா்.

மூன்றடைப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அசோக்குமாா் மாா்ச் 6ஆம் தேதி சமூக வலைதளங்களைக் கண்காணித்தபோது, ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த விடியோவில், வன்முறையைத் தூண்டும் வகையில் பின்னணி வசனம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலும், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி, மூன்றடைப்பு போலீஸாா் 3 பிரிவுகளின்கீழ், வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்தியதில், அந்த சமூக வலைதள கணக்கை பயன்படுத்தியவா் விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை, காமராஜ் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாதேஷ் (18) என்பது தெரிய வந்தது. அவரை மூன்றடைப்பு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.