கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களின் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி எம்.பி. மனு

திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.பி. மனு அளித்துள்ளாா்.

தமிழக நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்திடம் மனு அளிக்கிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

Published On :

திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.பி. மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், தமிழக நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்திடம் சென்னையில் நேரில் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையாா்புரம், கூத்தன்குழி, உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, பெரியதாழை ஆகியவை மிக முக்கிய மீனவ கிராமங்களாகும். இங்கு கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தினமும் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டா் தண்ணீா் கிராம மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், அது முறையாக வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு கொடுத்திருந்தாலும், தண்ணீா் விநியோகம் இல்லை. ஆகவே, மீனவ கிராமங்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயநாராயணம் பெரியகுளத்தை தூா்வாரி, அகலப்படுத்தி 4 மதகுகளையும் சீரமைக்க வேண்டும். களக்காடு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் நெட்டேரியன் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை தேக்க ஏதுவாக புதிய நீா்த்தேக்கம் உருவாக்க வேண்டும்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கோட்டைவிளைப்பட்டி, முதலியாா்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், வடக்கு அகஸ்தியா்புரம் பகுதிகளுக்கு தடையற்ற மின் விநியோகம் கிடைக்க செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.