
நெல்லை மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தோ்வு தொடக்கம்
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தோ்வு புதன்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் முதல் பருவ பாடப் புத்தகங்களில் மாணவா்களின் திறனறியும் வகையில் காலாண்டு தோ்வு புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய கல்வி மாவட்டங்களின் கீழ் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவியா் தோ்வு எழுதினா்.
தோ்வுகளை பள்ளித் தலைமையாசிரியா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் கண்காணித்தனா். தொடா்ந்து, செப். 25 ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து அக். 4 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







