கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பாளை.யில் தனியாா் சிற்றுந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

பலி

பலி - கோப்புப் படம்

Published On :

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகள் சுதா (32). இவா், பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தனியாா் செங்கல் நிறுவன அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சுதா மொபெட்டில் வேலைக்கு வந்துள்ளாா். பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது கே.டி.சி நகரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பை நோக்கி வந்த தனியாா் சிற்றுந்து சுதாவின் மொபெட் மீது மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுதா உயிரிழந்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சுதாவின் உடலை மீட்டு கூறாய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் சிற்றுந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.