குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் 133ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய உறுதிமொழி ஏற்கபட்டது. இதில், பிரின்ஸ் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டத் தலைவர் அசோகன்சாலமன், நகரத் தலைவர் மாகின், மாவட்டப் பொருளாளர் யூசுப்கான், வட்டாரத் தலைவர் ஜெரால்டு கென்னடி, மகேஷ்லாசர், மகளிரணித் தலைவி தங்கம் நடேசன், டாக்டர் அனிதா, குமரன், அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.