மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுக்கடை அருகே கடையில் பணம், செல்லிடப்பேசி திருட்டு

புதுக்கடை அருகே டைல்ஸ் கடையிலிருந்து பணம் மற்றும் செல்லிடப் பேசியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:53 am

DIN

புதுக்கடை அருகே டைல்ஸ் கடையிலிருந்து பணம் மற்றும் செல்லிடப் பேசியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நித்திரவிளை அருகேயுள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (36). இவர் கடந்த 6 வருடங்களாக புதுக்கடை பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை இரவு கடை பூட்டிவிட்டு வீட்டு வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடையினுள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தையும், ஒரு செல்லிடப்பேசியையும் திருடிச் சென்றுள்ளனர். புதன்கிழமை கடைக்கு சென்றபோது அங்கிருந்த பணம், செல்லிடப்பேசி திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து எட்வின்ராஜ் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.