தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு

ஆரல்வாய்மொழி பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:10 pm

DIN

ஆரல்வாய்மொழி பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து பாசன பயன்பாட்டுக்காக குளங்களுக்கான நீர்வரத்து  ஓடை உள்ளது. இந்த ஓடையானது பொய்கை அணையிலிருந்து ஆரல்வாய்மொழி வடக்கூர் குடியிருப்பு வழியாக ஆரம்ப சுகாதார நிலையம்,  அரசு மேல்நிலைப் பள்ளியைக் கடந்து பெரியகுளத்தில் இணைகிறது.
பின்னர்,  கிளையாகப் பிரிந்து நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலை,  குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து தெற்கு பகுதியில் உள்ள ராமர் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில்,  இந்த ஓடை முழுவதும் குப்பைகளும்,  சகதியுமாக சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஓடைக்கு நீர்வரத்து பாதிக்காத வகையில் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.