திருவட்டாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன.
இதுகுறித்து திருவட்டாறு வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தர் கூறியதாவது,
திருவட்டாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் உயர் விளைச்சல் தரக்கூடிய தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. இதில், நாட்டு ரக நெட்டை தென்னங்கன்றுகள் ரூ. 40 க்கும், உயர் விளைச்சல் நெட்டை-குட்டை இனங்கள் ரூ. 60-க்கும், குட்டை-நெட்டை இனங்கள் ரூ. 150- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் வந்து தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.