திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி குமரி முக்கடல் சங்கமத்தில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கன்னியாகுமரி முக்கடல் 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:16 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், அதன் நிறுவனர் தலைவர் வை. தினகரன் தலைமையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அவ்வமைப்பைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஜெய்சிங், அருளானந்தம், ஜனார்த்தனம், முகமது யாசின், மோகன்தாஸ், கண்ணன், முகமது ஜவாஹிர், மாவட்ட நிர்வாகிகள் சிகின் ராபிக், ராஜ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் நந்தகுமார், மணி, பாலமுருகன், ஐஸ்வர்யா, வெங்கடேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.