கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் பச்சரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தக்கலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் புலியூர்குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது லாரி ஓட்டுநர் சிறிது தொலைவு தள்ளி நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். போலீஸார் லாரியை சோதனையிட்டபோது சாக்குமூட்டைகளில் 4 டன் ரேஷன் பச்சரிசி இருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நாகர்கோவில் உணவு தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

