குமரியில் சித்திரையை வரவேற்கும் விதமாக கணிக் கொன்றை மரங்கள் சரம், சரமாக பூக்களை பூத்த வண்ணம் காட்சியளிக்கின்றன.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதம் பிறக்கப்போகிறது என்பதை உணர்த்தும் மரங்கள் கணிக் கொன்றை மரங்கள் தான். மஞ்சள் நிறங்களில் சரம், சரமாகத் தொங்கிக்கிடக்கும் இம்மரப்பூக்கள் சித்திரை மாதம் பிறக்கிறது என்பதை நினைவுப் படுத்திவிடும்.
குமரியிலும், கேரளத்திலும் சித்திரை விஷு என்று சொல்லப்படும் சித்திரை முதல்நாளில் இப்பூக்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுவிடும். கோயில்களில், வீடுகளில் வைக்கப்படும் சித்திரை கனி காணல் நிகழ்ச்சியில் கணிக்கொன்றைப் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. சித்திரை விஷு நாளில் காலையில் எழுந்தவுடன் முதல் காட்சியாக கனிகளுடன், இந்தப் பூக்களையும் பார்த்தால் ஏக ஐஸ்வர்யம் ஆண்டு முழுவதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கோயில்களிலும், வீடுகளிலும் கணிக்கொன்றை மரங்கள் தற்போது பூத்துக் குலுங்கிய நிலையில் உள்ளன. சில மரங்களில் இலைகளே வெளியில் தெரியாதவாறு அத்தனையும் பூக்களாகக் காணப்படுகின்றன. மக்கள் இந்த மரங்களில் அருகில் நின்று நிழற்படங்களை எடுத்தும் கைப்படம் எடுத்தும் சமூக வலை தளங்களில் பதிவிட்டவாறு உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மது வாங்கிய விவகாரம்: காவல் நிலையத்தில் கணவருடன் கா்ப்பிணி தா்னா

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

