கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் விதத்தில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டும் நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வரும் நிலையிலும், ஆறுகளில் வெள்ளம் குறைவாகவே பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றிலும் தண்ணீர் குறைவான அளவிலேயே வரத்து உள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதமாக குளிக்கும் அளவுக்கு இங்கு தண்ணீர் கொட்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளில் பலர் இங்குள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
இதே போல் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

