அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடையன்விளை முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3.50 லட்சம் செலவில் சமையல் கூடம் கட்டும் பணியை எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வுக்கு, ஊர்த் தலைவர் சி. தர்மராஜ் தலைமை வகித்தார். நிர்வாகி பி.என். ராமசுவாமி முன்னிலை வகித்தார். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் என். தாமரைபாரதி, பேரூர் செயலர் பி. பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரேம் ஆனந்த், ஒன்றியப் பிரதிநிதி எஸ். செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.