
ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சிறப்புக் கூட்டம்
அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் நாகர்கோவில்
அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் பி.ராஜநாயகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.எம்.ஐவின் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
டிஎன்இபிடபிள்யூஓ மாநில துணைத் தலைவர் வி.ஜெயராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில உதவிச் செயலர் எம்.சுந்தர் ராஜ், தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாநில அட்ஹாக் கமிட்டி உறுப்பினர் டி.ஆதித்தன், ஏஐபிஆர்பிஏ ஆலோசகர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலர் எ.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
இதில், ஞானாசீர்வாதம், பி.அல்போன்ஸ், ஆர்.பிரான்சிஸ், டி.செல்வராஜ், சி.அய்யப்பன் பிள்ளை, எஸ்.பாலசுந்தர ராஜ், எஸ்.ராமச்சந்திரன், கே.சாகுல் ஹமீது, சந்திரகாந்த், அமல்ராஜ், ஜெயச்சந்திரன், குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






