இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பொது சுகாதாரம் பேணுவதை சேவையாக கருத வேண்டும்: சார் ஆட்சியர்

பொது சுகாதாரம் பேணுவதை சேவையாக கருதி செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனர் குறிப்பிட்டார். 

Updated On :25 டிசம்பர் 2018, 7:12 am IST

பொது சுகாதாரம் பேணுவதை சேவையாக கருதி செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனர் குறிப்பிட்டார். 
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து சார் ஆட்சியர் பேசியது: சுகாதார ஆய்வாளர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் நீங்கள் (மாணவர்கள்) அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். சுகாதாரம் பேணுவதை சேவையாக கருத வேண்டும் என்றார் அவர்.
விழாவை, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசியது: சமுதாய  நலனில் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணி செய்யும் நீங்கள் அப்பணியை சேவையாக கருதி முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கல்லூரி தலைவர் அருள்கண்ணன், துணைத்தலைவர் அருள்ஜோதி, முதல்வர் லியாகத் அலி, நிர்வாக அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
முன்னதாக மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி  கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் அருணாச்சலம், ரோஜாவனம் அறக்கட்டளை நிறுவனர்கள் புலவர் ரத்தினசாமி, பார்வதி, ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி நடராஜன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.