தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவனந்தபுரம் - காரைக்கால் வார ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரத்திலிருந்து காரைக்காலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:47 am

DIN

திருவனந்தபுரத்திலிருந்து காரைக்காலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் செயலர் எட்வர்ட்ஜெனி தெற்கு ரயில்வேக்கு அனுப்பியுள்ள மனு: தெற்கு ரயில்வே திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் டவுண்,  திருநெல்வேலி,  மதுரை,  திருச்சி வழியாக காரைக்காலுக்கு வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயிலை (ரயில் எண் 06045, 06044)  அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்கப்படவேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 
எனவே, திருவனந்தபுரம் - காரைக்கால் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். மேலும் இந்த ரயில் குழித்துறை,  இரணியல், ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.