ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் இயந்திரவியல் துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை அருள்பணியாளர் டோமி லிபின் ராஜா ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
மரியா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜி. ரசல் ராஜ், துணைத் தலைவர் பி. ஷைனி தெரசா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். கருத்தரங்கில் கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்ப அலுவலர் ஏ.வி. சதீஷ் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி, பேராசிரியர் தேவ் ஆர். திலீபன், அலுவலக மேலாளர் டேவிட் அருள் தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ரோபோட்டிக் கண்காட்சி நடத்தபட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை இயந்திரவியல் துறைத் தலைவர் ஷிபு செந்தில் லால் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித், பும்ரா விளையாடுவார்களா?

ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் தரும் புதிய கார்! அறிமுகம் செய்கிறது மாருதி!

ஐடி பங்குகள் ஏற்றம் எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
