இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு

மார்த்தாண்டம் மேம்பாலத்தை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் குழுவினர் புதன்கிழமை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Updated On :24 ஜனவரி 2019, 1:12 am IST

மார்த்தாண்டம் மேம்பாலத்தை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் குழுவினர் புதன்கிழமை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
வெட்டுவெந்நியில் குழித்துறை ஆற்றுப் பாலம் முதல் மார்த்தாண்டம் அருகேயுள்ள பம்மம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 220 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்பு பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேம்பாலத்தின் மேல் பகுதி பணிகள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி முதல்  பரீட்சார்த்த முறையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ் பகுதி சாலைகள் சீரமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மார்த்தாண்டம் சந்திப்பு அருகிலுள்ள கோதேஸ்வரம் கோயில் செல்லும் சாலை அருகே மேம்பாலத்தில்  பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, சாலையின் கீழ்பகுதிக்குச் செல்ல சுழல் படிக்கட்டுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கம் செல்லும் அரசுப் பேருந்துகள் இங்கு நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தமும் அமைக்கப்படுகிறது. 
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர் பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மேம்பாலம் தொடங்கும் வெட்டுவெந்நி பகுதியிலும், அதையொட்டி அதிக உயரமான தூண்கள் அமைந்துள்ள பகுதியிலும் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்பு, பம்மம் உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.எனினும், ஆய்வு நடத்தியதற்கான காரணம் குறித்த எந்த தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பார்வதிபுரம் பாலத்தைப் பார்வையிட சென்றுவிட்டனர்.
இதனிடையே, ஜன. 27 ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டும்போது, மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.