கடலோரப் பாதுகாப்பு குழுமம் சார்பில், கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஸீ விஜில் ரோந்து பணி நடைபெற்றது.
மும்பையில் கடல்வழியாக ஊடுருவி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு கடல்வழிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன படகுகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளுடன் கடல்வழி ரோந்து பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் நாடுதழுவிய ஸீ விஜில் ரோந்துப் பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை இரவு வரை ரோந்து பணி நடைபெறும். கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையும், கன்னியாகுமரி முதல் குளச்சல் வரையிலும் இந்த ரோந்து பணி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி கடலோரக் காவல் குழும ஆய்வாளர் சைரஸ் தலைமையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச்சோதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வியக்க வைக்கும் பள்ளி

”பேருந்துக்காக இரவு முழுவதும் காத்திருக்கிறோம்!” சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்! | Madurai

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் பதில்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


