குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தக்கலை அருகே வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை: 2 பேர் சரண்

கன்னியாகுமரி மாவட்டம்,  தக்கலை அருகே வேன் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இருவர் புதன்கிழமை சரணடைந்தனர்.

Updated On :24 ஜனவரி 2019, 1:14 am IST

கன்னியாகுமரி மாவட்டம்,  தக்கலை அருகே வேன் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இருவர் புதன்கிழமை சரணடைந்தனர்.
தக்கலை அருகேயுள்ள சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின்ராஜ் (35), வேன் ஓட்டுநர். இவரது மனைவி சுலோச்சனா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெஸ்டின்ராஜ் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம்கொண்டு,  அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாராம். இது தொடர்பாக, அவர் மீது கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் சுலோச்சனா புகார் அளித்தார். தம்பதியை போலீஸார் செவ்வாய்க்கிழமை அழைத்து சமரப்படுத்தி அனுப்பிவைத்தனர். தன் மீது மனைவி புகார் கொடுத்ததற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ரத்தினதாஸ் (65), அவரது மருமகன் ஜெபசிங் (34) ஆகியோர்தான் காரணம் எனக் கருதி, அவர்களுடன் ஜெஸ்டின்ராஜ் தகராறு செய்தாராம்.
அப்போது ரத்தினதாஸும், ஜெபசிங்கும் சேர்ந்து ஜெஸ்டின்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து ரத்தினதாஸையும், ஜெபசிங்கையும் தேடிவந்தனர். இந்நிலையில், இருவரும் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.