அருமனை அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல்
அருமனை அருகே பாஜக பிரமுகரை தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


அருமனை அருகே பாஜக பிரமுகரை தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அருமனை அருகேயுள்ள சிதறால் வட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் (52). இவா் மேல்புறம் ஒன்றிய பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.
இவா் சிதறால் பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மனைவி சீதாராணிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து மர பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் கடையை காலி செய்து தர வேண்டும் என அதன் உரிமையாளரான சீதாராணி தெரிவித்துள்ளாா். அதற்கு கடையை திடீரென காலி செய்ய முடியாது என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் வில்சன் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சீதாராணி, அவரது மகன் மற்றும் 3 பேரோடு சோ்ந்து கடையில் இருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன், வில்சனை தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த வில்சன் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...