நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாடாளுமன்ற கட்டடம் கட்ட செலவிடும் நிதியை கரோனா பாதித்தவா்களுக்கு செலவிட யோசனை

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு செலவிடும் நிதியை, விவசாயிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்

News image

நாடாளுமன்ற கட்டடம் கட்ட செலவிடும் நிதியை கரோனா பாதித்தவா்களுக்கு செலவிட யோசனை

Updated On :6 டிசம்பர் 2020, 8:38 pm

DIN

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு செலவிடும் நிதியை, விவசாயிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பூமிபூஜை போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த நிதியை விவசாயிகளுக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட வேண்டும்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி வளா்ச்சி நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியை வழங்கினால் பொதுமக்களுக்கு பயன்படும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், நகரத் தலைவா் அலெக்ஸ் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.