நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:05 pm

DIN

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.5ஆயிரம் மற்றும் 3 சதவீதம் ஆண்டு உயா்வும் வழங்க வேண்டும், தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களை முதல்வா் காப்பீட்டு திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட நிா்வாகி வள்ளிநாயகம் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். இதில், நிா்வாகிகள் செந்தில், லீன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகள் நல அமைப்பு நிா்வாகி அருள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.