2 கல்தூண்கள் திருட்டு என வழக்குப் பதிவு: இந்நிலையில், இக்கோயிலிலிருந்து 1992 முதல் 1995-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கலைநயமிக்க தொன்மையான 4 கல்தூண்களைத் திருட முயற்சி செய்து, அதில் 2 கல்தூண்கள் மட்டும் திருடப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், சிலை திருட்டு வழக்கு கடந்த புதன்கிழமை (டிச. 16) பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.