கிறிஸ்துமஸ் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்:நெல்லை சரக டிஐஜி ஆய்வு

அருமனையில் 22 ஆம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வருகைதரவுள்ள நிலையில், விழா நடைபெறும் மைதானத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு ஆய்வு செய்தாா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு.
Updated on
1 min read

குலசேகரம்: குமரி மாவட்டம், அருமனையில் 22 ஆம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வருகைதரவுள்ள நிலையில், விழா நடைபெறும் மைதானத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குமரி மாவட்டம் அருமனையில், கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் 22, 23 ஆம் தேதிகளில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இதில் 22 ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா்.

விழா நடைபெறும் மைதானம் சீரமைப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகளும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் முதல்வரின் வாகன அணிவகுப்பு மேடைக்கு வரும் பகுதி, வெளியேறும் பகுதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனா். பின்னா் கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி.ஸ்டீபனிடம் ஆலோசனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com