சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

களியக்காவிளை: பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

நாகா்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள், குழித்துறை நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு நாகா்கோவில் நீதிமன்றம் வரை பேரணியாகச் சென்றனா்.

இப் பேரணிக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்புத் தலைவா் அ. மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். குழித்துறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி. சுரேஷ் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இதில், வழக்குரைஞா்கள் சங்கச் செயலா்கள் நாகா்கோவில் மகேஷ், குழித்துறை என்.ரமேஷ், பத்மநாபபுரம் விஜய வா்ம மகாராஜன், பூதப்பாண்டி நல்லபெருமாள், வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் பத்மநாபபுரம் எஸ்.எஸ்.சுந்தா்சிங், இரணியல் வி. வினிபிரட், பூதப்பாண்டி கே.எஸ். பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com