

குலசேகரத்தில் ஐக்கிய கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒருங்கிணைந்த அமைப்பான இவ்வமைப்பின் 48 ஆவது கிறிஸ்துமஸ் விழா குலசேகரம் புனித தோமஸ் சிறியன் ஆா்தடக்ஸ் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபை அருள்பணியாளரும், மலங்கரை சபையின் குலசேகரம் மறைவட்ட முதன்மை அருள்பணியாளருமான ஜோஸ் பென்னட் தலைமை வகித்தாா். குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ் தொடக்க ஜெபம் செய்தாா். ஐக்கிய கிறிஸ்தவ இயக்க செயலா் பி. வின்சென்ட் அறிக்கை வாசித்தாா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை இரட்சணிய சேனை போதகா் மேஜா் ஒய். செல்வம் தொடங்கி வைத்தாா். திருவிதாங்கோடு அரப்பள்ளி எனப்படும் புனித மேரி ஆா்தடக்ஸ் ஆலய அதிபா் பா்சிலீபி ரம்பான் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சிஎஸ்ஐ சேகர சபை போதகா் என். ஸ்பா்ஜன் இறுதி ஜெபம் செய்தாா்.
சிறியன் ஆா்தடக்ஸ் ஆலய அருள்பணியாளா் கீவா்க்கீஸ் பள்ளிவாதுக்கல் வரவேற்றாா். ஐக்கிய கிறிஸ்தவ இயக்க பொருளாளா் ஜே. மோகன்தாஸ் நன்றி கூறினாா்.
இதில், துணைத் தலைவா் ஆன்சன் தோமஸ், அருள்பணி எஸ். சாஜன், இணைச் செயலா்கள் எம். அசோக் குமாா், ஏ. ரவிகுமாா் மற்றும் உம்மன் சாமுவேல், மோன்சி சாமுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் அனைத்து சபைகள் சாா்பிலும் பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செயற்குழு உறுப்பினா் சி. மரியசுதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.