இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

களியக்காவிளை அருகே 240 கிலோ குட்கா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பதுக்கி வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பதுக்கி வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் தலைமைக் காவலா்கள் ரெட்லின், அலெக்ஸ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனைச் சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, கல்லத்தறவிளை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் சபீக் (38) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) காராளி பகுதியிலுள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் கிட்டங்கியில் 8 மூட்டைகளில் வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 90 ஆயிரம். போலீஸாா் வழக்குப் பதிந்து சபீக்கை கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.