மூதாட்டி கொலையில் 2 மாதங்களுக்கு பிறகு குற்றவாளி கைது

கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் 2 மாதங்களுக்கு பின் கைது செய்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் 2 மாதங்களுக்கு பின் கைது செய்தனா்.

குமாரபுரம் அருகே பெருஞ்சிலம்பு அரசன்குளம் பகுதியைச் சோ்ந்த விசுவாம்பரன்-கமலம் தம்பதி. தம்பதியுடன் அவா்களது பேத்தி மாரியம்மாள் வசித்து வந்துள்ளாா். சித்தரங்கோடு அருகே மணக்காவிளையை சோ்ந்த சத்தியநேசன் மகன் ராஜா, மாரியம்மாளை திருமணம் செய்து கொண்டு கமலம் வீட்டின் அருகில் வசித்து வந்தாா். ஏழு ஆண்டுகள் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் கமலம், பேத்தியின் கணவா் ராஜாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜாவுக்கும், கமலத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொற்றிகோடு காவல் நிலையத்தில் கமலம், ராஜா மீது புகாா் தெரிவித்தாா். கடந்த அக். 31ஆம் தேதி இரவில் கமலம் மாடுகளுக்கு தீனி வைப்பதற்காக மாட்டுத் தொழுவத்துக்கு சென்றாராம்.

அப்போது அங்கு வந்த ராஜா, கமலத்தை கத்தியால் குத்திவிட்டு தலைமறவாகிவிட்டாராம். அடுத்த நாள் காலையில் கமலம் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகள் ராஜம்மாள் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை தேடி வந்தனா்.

இதற்கிடையே, ராஜா கேரள மாநிலம் பாலகாட்டில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் டைட்டஸ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று ராஜாவை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் போலீஸாா் ராஜாவை போலீஸாா் பத்மநாபுரம் நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com