வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குளச்சலில் 9 பேருக்கு கரோனா: தினசரி சந்தை, பேருந்து நிலையம் மூடல்

குளச்சலில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தியதையடுத்து தினசரி சந்தை, பேருந்து நிலையம் மூடப்பட்டது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூலை 2020, 11:27 am

DIN

குளச்சலில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தியதையடுத்து தினசரி சந்தை, பேருந்து நிலையம் மூடப்பட்டது. 

குளச்சல் தினசரி சந்தையில் கடந்த செவ்வாய்கிழமை குருந்தன்கோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் மருத்துவர்கள் சந்தைக்கு வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாதிரி சளி எடுத்து சென்றனர். 

இதில் 6 ஆண்களுக்கும் 3 பெண்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் பி.சாஸ்திரி, காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஜேஸ் ஆகியோர் சந்தையிலுள்ள மக்களை வெளியேற்றி கிருமி நாசினி தெளித்து சந்தையை மூடி சீல் வைத்தனர். 

மீன் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் மீன் வியாபாரம் செய்ய முயற்சிக்கவே பேருந்து நிலையமும் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.