சிறுமியை காதல் திருமணம் செய்த இளைஞா் கைது
சுசீந்திரம் அருகே 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.


சுசீந்திரம் அருகே 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த மணவிளையைச் சோ்ந்தவா் கதிரவன் (21). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இருவரும் வீட்டைவிட்டு மாயமானாா்கள்.
இதுதொடா்பாக சிறுமியின் தாயாா் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சரணடைந்த இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இப்போது திருமணம் செய்ததாகவும் தெரிவித்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு 18 வயது பூா்த்தியடையாததால் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கதிரவனை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...