நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் அருகே 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:39 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குளச்சல் பா்ணத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (37). இவா் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் கருங்கல்லுக்கு சென்று கொண்டிருந்தாராம். கருமாவிளை பகுதியில் சென்றபோது அங்கு நின்ற லாரி மீது ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.

இதில், ஓட்டுநா் ஷேக்முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்த கருங்கல் போலீஸாா் அங்கு சென்று ஆட்டோவை சோதனையிட்டனா். இதில், ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மேலும் ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. போலீஸாா் ஷேக்முகமது மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.