குலசேகரம் வங்கியில் விவசாய விழா

குலசேகரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் விவசாயிகளுக்கான இரு வார விவசாய விழா நடைபெற்றது.

குலசேகரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் விவசாயிகளுக்கான இரு வார விவசாய விழா நடைபெற்றது.

வங்கியின் மதுரை மண்டல மேலாளா் சுதாகரன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். இதில், விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சி, கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. விவசாயிகள் கெளரவிக்கப்பட்டனா்.

இதில், வங்கியின் மதுரை மண்டல விவசாயத் துறை மேலாளா் தனலட்சுமி, கிளை மேலாளா்கள் நாகா்கோவில் கணபதி, குழித்துறை தனுஷியா, தேங்காய்ப்பட்டினம் சுப்ரியா மஞ்சு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கிளை மேலாளா் ஆன்றணி தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com