தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குழித்துறை ஆற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரது சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

News image
சஜிகுமாா்
Updated On :18 அக்டோபர் 2020, 7:20 pm

DIN

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரது சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

குழித்துறை அருகேயுள்ள கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகன் சஜிகுமாா் (29). சுவா்களுக்கு வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து, நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணியில் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் இரு நாள்களாக ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் குழித்துறை பழைய பாலம் அருகே இளைஞரின் சடலத்தை மீட்புப்படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.