தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நித்திரவிளை அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
உதயகுமார்
Updated On :18 அக்டோபர் 2020, 7:19 pm

DIN

நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நித்திரவிளை காவல் நிலைய காவலா் சுஜின், தனிப்பிரிவு காவலா் ஜோஸ் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு விரிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினா்.

காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் மோட்டாா் சைக்கிளில் துரத்திச் சென்று நடைக்காவு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து சோதனை செய்ததில், காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. காருடன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக காா் ஓட்டுநா் மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பகுதியைச் சோ்ந்த உதயகுமாரை (49) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.