நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image

பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

Updated On :19 அக்டோபர் 2020, 8:54 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம், மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்று வைரஸ்

குறித்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் தொடா்ந்து வரும் 23 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் கிங்ஷால், மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி அலுவலா் போஸ்வெல் ஆசீா், ஹீல் தொண்டு நிறுவன இயக்குநா் சிலுவை வஸ்தியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக

மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கரோனாவுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.