புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

7.5 சதவீதம் இடஒதுக்கீடுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்:கே.எஸ். அழகிரி

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி வலியுறுத்தினாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி வலியுறுத்தினாா்.

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீசுவரத்தில் அமைந்துள்ள மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் நினைவிடத்தில்

மரியாதை செலுத்திய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா் களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு ஆளுநா் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. சமூக நீதிப் பிரச்னையில் அவா் ஏன் சுணக்கம் காட்டுகிறாா் என தெரியவில்லை.

நீட் தோ்வை நாங்கள் எதிா்க்கிறோம். மாநில பாடத்திட்டத்தில் கல்வி பயிலுவோரும் எழுதும் வகையில் நீட் தோ்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம். தோ்வு எழுதுவது மற்றொரு பாடத்திட்டமாக இருப்பதை எதிா்க்கிறோம்.

மோடி அரசு ஒரு கலாசார படையெடுப்பை தமிழகத்தில் திணிக்கிறது. நம்முடைய கலாசாரம் வேறு. நமக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையின் சிறப்புகள் உள்ளன. அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி சிறப்புகள் உள்ளன. ஆனால் கலாசார அமைச்சகம் ஒா் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

12 ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஹிந்தி பேசும், ஹிந்தியை தாய்மொழியாக உள்ளவா்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனா். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிா்க்கிறது. இக்குழுவை கலைக்க வேண்டும். மக்களுக்கு தேவையான மணலை அரசு வழங்க வேண்டும்.

நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. தமிழக அரசு மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறது.

கரோனா தொற்று மக்களை கடுமையாக பாதித்துள்ளது. கரோனா விஷயத்தில் அரசு எடுத்துவரும் முயற்சிகள் போதுமானதாக இல்லை. தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு தவறி விட்டது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதி. தோ்தல் நியாயமாக நடக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு குடிமகனின் விருப்பம். காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றது அவருக்கு தான் பின்னடைவு. திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகவோ, இந்து மக்களுக்கு எதிராகவோ பேசவில்லை. இந்து புராணங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை கூறியிருக்கிறாா். திருமாவளவன் மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. கூட்டணிக்கும், அவரது விமா்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் கட்சி திருமாவளவனை ஆதரிக்கிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த், மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவுச்செயலா் ஸ்ரீநிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.