தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கேரளத்துக்கு கடத்த முயற்சி : 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள்.
Updated On :13 செப்டம்பர் 2020, 7:32 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோா் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து காரை சோதனை செய்ததில் அதில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவா்கள் மாா்த்தாண்டம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது மீன் பாரம் ஏற்றிச் செல்லும் பெட்டிகளுடன் சந்தேகப்படும் வகையில் வந்த மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டினா். ஆனால் அந்த வாகனம் நிற்கவில்லை. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று வெட்டுவெந்நி பகுதியில் வைத்து மினி டெம்போவை மடக்கிப் பிடித்தனா்.

தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இரு வாகனங்களில் இருந்தும் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கிலும், காா், மினி டெம்போ விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.