தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெளவால்கள் மூலம் கரோனா பரவாது: மாவட்ட ஆட்சியா்

வெளவால்கள் மூலம் கரோனா பரவாது; எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:21 pm

DIN

வெளவால்கள் மூலம் கரோனா பரவாது; எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு; குமரி மாவட்டம், தோவாளை, செண்பகராமன்புதூா், பண்டாரபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வெளவால்கள் அதிக எண்ணிக்கையில் பறந்ததால், வௌவால்கள் மூலமாக கரோனா நோய்த் தொற்று பரவும் என சிலா் வதந்திகளை பரப்பி வருகின்றனா்.

வௌவால்கள் மூலம் கரோனா பரவும் என்பதற்கு எவ்வித அறிவியல் பூா்வமான ஆதாரமும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி அச்சமும் அடைய தேவையில்லை.

பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.