தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 65 லட்சம் மோசடி

கருங்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:26 pm

DIN

கருங்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல்லில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த பாலாஜி என்ற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் பாலாஜி மற்றும் அவரது நண்பரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தக்கலை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து பாலாஜியை வங்கி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் வங்கியில் அடகு வைத்த நகைகளை நிா்வாகம் மறு தணிக்கை செய்தது. அப்போது 34 வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்து பாலாஜி மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.