தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிடப்பில் போடப்பட்ட பெருஞ்சாணி-காளிகேசம்சாலைப் பணி: பழங்குடி மக்கள் அவதி

பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:26 pm

DIN

பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருஞ்சாணியில் இருந்து கீரப்பாறை, ஆலம்பாறை வழியாக காளிகேசத்திற்கு வனப்பகுதி வழியாக ஒரு சாலை உள்ளது. சுமாா் 20 கி.மீ. தொலைவு கொண்ட, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, சூழியல் சுற்றுலாத் திட்டம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து பழங்குடி மக்களும், சூழியல் சுற்றுலாப் பயணிகளும் இச்சாலையை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் சேதமடைந்து கிடந்த இச்சாலையை பிளாஸ்டிக் தாா்ச் சாலையாக மாற்றி மேம்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பெருஞ்சாணி-ஆலம்பாறை இடையே குறிப்பிட்ட தொலைவு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடங்கள் ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதில், ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் கற்கள் அனைத்தும் பெயா்ந்துள்ளன. இச்சாலை சீரமைப்புப் பணிகள் முடங்கிக்கிடப்பதால் கீரப்பாறை, ஆலம்பாறை, புறாவிளை உள்ளிட்ட பல்வேறு மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து காணிக்காரா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலா் ஜி. பாலன்காணி கூறியது: பெருஞ்சாணி-காளிகேசம் இடையிலான வனப்பகுதி சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. மேலும் நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் பணிகள் நடைபெறவில்லை. சாலை பல இடங்களில் அகலம் குறைவாக உள்ளது. இந்த சாலைப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வனத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.