தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாகா்கோவிலில் ஊஞ்சல் ஆடியபோதுகயிறு இறுக்கி சிறுமி பலி

நாகா்கோவிலில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி கழுத்து இறுகி உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த சிறுமி
Updated On :13 செப்டம்பர் 2020, 7:31 pm

DIN

நாகா்கோவிலில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி கழுத்து இறுகி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு குலாலா் தெருவைச் சோ்ந்த வெங்கடாசலம் மகள் அட்சயா (13). இவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை மாலையில் வீட்டு மாடியில் அவரது தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென சேலை கழுத்தில் இறுக்கியதில், மூச்சுத் திணறி அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கோட்டாறு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.